×

போலீசார் கொடி அணிவகுப்பு

பாலக்காடு, ஏப்.3: பாலக்காடு மாவட்டத்தில் திருத்தாலா, பட்டாம்பி, ஷொர்ணூர், ஒத்தப்பாலம், கோங்காடு, மன்னார்க்காடு, மலம்புழா, பாலக்காடு, தரூர், சித்தூர், நெம்மாரா மற்றும் ஆலத்தூர் ஆகிய 12 சட்டமன்ற தொகுதிகளில் ஏப்.9ம் தேதி தேர்தல் நடபெறவுள்ளது. இதையொட்டி பாலக்காடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பாலக்காடு மாவட்டத்தில் புதுநகரம், கொழிஞ்சாம்பாறை, சாலிச்சேரி, பாலக்காடு டவுன் ஆகிய இடங்களில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் மாநில அரசு போலீசார், ராணுவப்படையினர் மற்றும் கர்நாடகா ரிசர்வ் போலீசார் ஆகியோர் பங்கேற்று தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் பதட்டம் இல்லாமல் தங்களது வாக்குகளை செலுத்தவும், சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் காத்திடவும் உறுதி எடுத்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

 

Tags : Palakkad ,Palakkad district ,Tirutala ,Pattambi ,Shornur ,Othapalam ,Gongadu ,Mannarkkad ,Malampuzha ,Tharoor ,Chittoor ,Nemmara ,Alathur ,
× RELATED ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு