×

கரூர் மாநகராட்சியில் கொசுக்களை கடுப்படுத்த அபேட் மருந்து தெளிக்க வேண்டும்

கரூர், ஏப். 3: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளில் கொசுக்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்த வீடுகள் தோறும் அபேட் மருந்து தெளிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கரூர் மாநகராட்சியில் தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர், வேலுசாமிபுரம், பசுபதிபாளையம், வெங்ககல்பட்டி, இனாம்கரூர் போன்ற பல்வேறு பகுதிகள் புறநகர்ப்பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.

தற்போதைய நிலையில், பனிக்காலம் முடிவடைந்து, கோடை காலம் துவங்கியுள்ளது, இருப்பினும், கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தொந்தரவுகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநகராட்சியின் புறநகர்ப்பகுதியில் பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று அபேட் மருந்து தெளிக்கவேண்டும்.

 

Tags : Abate ,Karur Corporation ,Karur ,Thanthonimalai ,Chanapritty ,Rayanur ,Velusamypuram ,Pasupathipalayam ,Venkakalpatti ,Inamkarur ,Karur Corporation… ,
× RELATED மதுபானம் விற்ற 2 வாலிபர்கள் கைது