சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர்; பாமகவுடையது வளர்ச்சிகான தேர்தல் அறிக்கை; தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் பாமக தேர்தல் அறிக்கையின் அடிப்படை; போதையில்லா தமிழகம் படைப்பதே பாமகவின் முதன்மையான நோக்கம்.
* ஆட்சிக்கு வந்தால் 5 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்
* அரசு மற்றும் தனியார் நாடு துறைகளில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
* பட்டப்படிப்பு முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும்
* பட்ஜெட்டில் 25% வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கப்படும்
* குறுகிய கால மற்றும் மத்திய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும்
* குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்
* மகளிர் உரிமைத் தொகை எந்த நிபந்தனையும் இன்றி அனைவருக்கும் ரூ.2,000 வழங்கப்படும்
* பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம்
* நகர்ப்புறங்களில் பணியாற்றும் ஏழை தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மக்கள் உணவுத் திட்டம்
* 10 ரூபாய்க்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொரியல், ஊறுகாய் என நிறைவான மதிய உணவு வழங்கப்படும்; ஞாயிற்றுக் கிழமைகளில் ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும்
* பயிர்க்கடன், கல்விக்கடன் தள்ளுபடி
* தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு
* 100 நாள் வேலைத் திட்டம்,150 நாட்களாகும்; அது வேளாண் பணிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்
* சாதிவாரி கணக்கெடுப்பு
* 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி
* நீட் தேர்வு விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்று கூறியுள்ளார்.
