×

பவானியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ

ஈரோடு, ஏப். 1: ஈரோடு மாவட்டம் பவானி சித்தாறு பெரியார் நகரை சேர்ந்த சூர்யா (21). இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வந்தார். சிறுமியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த குழந்தைகள் நலக்குழுவினர் பவானி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சூர்யா மீது போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : Bhavani ,Erode ,Surya ,Periyar Nagar, Siddhar, Bhavani, Erode district ,
× RELATED குழாய் வழி இயற்கை காஸ் பெற பதிவு செய்ய அறிவுறுத்தல்: மாவட்ட கலெக்டர் தகவல்