- முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்
- திமுக
- ஆரணி
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்
- திருவண்ணாமலை மாவட்டம்
- கலைஞர் திடல்
- செவூர் புறவழிச் சாலை
ஆரணி, ஏப்.1: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை முதல்வர் மு.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து, வரும் 10ம் தேதி ஆரணி அடுத்த சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் திடலில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின்படி, முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ள ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் பொதுக்கூட்டம் மேடை அமைக்கும் இடத்தினை, மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்பி நேற்று, முதல்வரின் பாதுகாப்பு மற்றும் பிரசார முன்னேற்பாடுகளை கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுக்கூட்டம் மேடைகள் பிரமாண்டமாக அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசணை செய்தார். அப்போது, ஆரணி தொகுதி வேட்பாளர் மகாலட்சுமி கோவர்தனன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், நகர மன்ற தலைவர் ஏசி.மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழன், சுந்தர், துரை மாமது, மோகன், ராஜ்குமார், நகர செயலாளர் (பொ) மணிமாறன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவி, ஒன்றிய துணை செயலாளர் குமரேசன், நகரமன்ற உறுப்பினர் அரவிந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
