சென்னை: அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு சென்னை உட்பட 17 தொகுதிகளுக்கான 3ம் கட்ட பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அதிமுகவில் முதற்கட்டமாக 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த முதற்கட்ட பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், நத்தம் விசுவநாதன் நத்தம் தொகுதியிலும், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக 127 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் 30 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 42 புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 150 அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு 67 தொகுதிகளை ஒதுக்கியுள்ள நிலையில், 167 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் உள்பட 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 3ம் கட்டமாக 17 ெதாகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அமைச்சர், மகளிர்அணி செயலாளர் வளர்மதி ஆயிரம் விளக்கு தொகுதியிலும், அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா அண்ணாநகர் தொகுதியிலும், முன்னாள் வாரிய தலைவரும், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலும், அமைப்பு செயலாளர், முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் திட்டக்குடி தனி தொகுதியிலும், அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ துறைமுகம் தொகுயிலும், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ விருகை வி.என்.ரவி விரும்பாக்கம் தொகுதியிலும், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்தியா தி.நகர் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ எம்.கே.அசோக் வேளச்சேரி தொகுதியிலும், சென்னை புறநகர மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் சோழிங்கநல்லூர் தொகுதியிலும், வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆர்.கே.நகர் தொகுதியிலும், கொள்கை பரப்பு துணை செயலாளர் விஜயகுமார் வில்லிவாக்கம் தொகுதியிலும், புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன் திருச்சுழி தொகுதியிலும், புரட்சி தலைவி பேரவை இணைச் செயலாளர் சரவணன் ஆலந்தூர் தொகுதியிலும், புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பொற்கொடி, திரு.வி.நகர் தொகுதியிலும், தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் அபிஷேக் ரங்கசாமி எழும்பூர் தொகுதியிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் தன.விமல் ஆலங்குடி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். ேமலும் இதில் முன்னாள் அமைச்சர்கள் 2 பேருக்கும், முன்னாள் எம்எல்ஏக்கள் 6 பேருக்கும், முன்னாள் எம்பி ஒருவர் என போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
