சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளனர். அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரேமலதா கையெழுத்தானது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கனவே ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 (பத்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸுக்கு 28, விசிகவுக்கு 8, சிபிஎம் மற்றும் சிபிஐக்கு தலா 5 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், ஐயுஎம்எல், மமக,கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார். நாளை தேமுதிக சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அறிவிக்க உள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதி செய்யப்பட்டு 27ம் தேதி தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ரிஷிவந்தியம், விருத்தாசலம், விருதுநகர், ஆம்பூர், விருகம்பாக்கம் உள்பட 25 தொகுதிகள் விருப்ப பட்டியலில் உள்ளன. விஜய பிரபாகரன் போட்டியிட விருதுநகர் தொகுதியை தேமுதிகவுக்கு கேட்டிருப்பதாக பிரேமலதா பேட்டி அளித்துள்ளார். ஏப்.1ம் தேதி தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்
