தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகில் பறக்கும் படை அதிகாரி ராபின் தாமஸ் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது தஞ்சையிலிருந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த முத்தமிழ்செல்வி என்பவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி மஞ்சள் துணி பையில் எடுத்து வந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1லடசம் ரொக்கப் பணத்தை பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலர் வரதராஜனிடம் ஒப்படைத்தனர்.
