- பாஜா
- டப்
- அட்டெமுகா
- சிதம்பரம் கலை
- காங்கிரஸ்
- நிர்வாகிகளின் ஆலோசனை
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
- மத்திய நிதி அமைச்சர்
- ப.
- சிதம்பரம்
- எம்எல்ஏ மாங்குடி
- காங்கிரஸ் மாவட்டம்
- ஜனாதிபதி
- சஞ்சயகந்தி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், எம்எல்ஏ மாங்குடி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாக நிர்வாகிகள் கூறுகையில், எந்த தொகுதி, யார் வேட்பாளர் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்குகள் பெறுவார்கள். அவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக கூறினர்.
நிகழ்ச்சி முடிந்து பின்னர், ‘‘அதிமுக தலைமையில் கூட்டணி என கூறுகின்றனர், ஆனால் அக்கட்சி தலைவர்கள் டெல்லிக்கு அடிக்கடி சென்று சந்திக்கிறார்களே’’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணிக்கு உண்மையான தலைவர் பாஜ. ஒப்புக்காக முன்வைக்கப்படுகிற தலைவர் அதிமுக. பொம்மலாட்ட நிகழ்ச்சியில் பொம்மை முக்கியம் இல்லை. நூல் யார் கையில் உள்ளது என்பது தான் முக்கியம்’’ என்றார்.
