×

உலகில் 9 கோள்கள் இருந்தாலும் பவர்ஃபுல்லாக இருப்பது சூரியன்தான்: ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

 

ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்த உலகத்தில் 9 கோள்கள் இருந்தாலும் பவர்ஃபுல்லாக இருப்பது சூரியன் தான். என்றைக்கும் ஆட்சி செய்யக்கூடியது உதயசூரியன் தான். மீண்டும் ஸ்டாலின் வேண்டும்; ஆட்சி தொடரட்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். தமிழக மக்களுக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் சேர்த்து தொலைநோக்கு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 11.5% கொண்டு முதலிடம் வகிக்கின்றது. அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் அல்ல, நாமினி முதலமைச்சர். தமிழகத்தில் மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்’’ என்றார். ராஜபாளையத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: மு.க.ஸ்டாலினின் 5 ஆண்டுகால ஆட்சி முதிர்ச்சியான ஆட்சி. இரவு பகல் பாராது ஓயாமல் உழைத்து வருகிறார்.

இந்த உலகத்தில் 9 கோள்கள் இருந்தாலும் பவர்ஃபுல்லாக இருப்பது சூரியன் தான். என்றைக்கும் ஆட்சி செய்யக்கூடியது உதயசூரியன் தான். மீண்டும் ஸ்டாலின் வேண்டும்; ஆட்சி தொடரட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : O. Paneer ,Selvam ,Srivilliputur ,Udayasuriyan ,Stalin ,O. The Paneer ,Dimuka ,Srivilliputur, Virudhunagar District ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...