×

இறைச்சிக்கடையில் பணியாற்றுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் : பறவை காய்ச்சல் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

சென்னை : இறைச்சிக்கடையில் பணியாற்றுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கிண்டி சிறு​வர் பூங்காவில் உள்ள வேடந்​தாங்​கல் ஈரநிலப் பறவை​கள் கூண்​டில் சில பறவை​களுக்கு பறவைக் காய்ச்​சல் உறுதி செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து தீவிர முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும் பொருட்டு பூங்கா தற்​காலிக​மாக மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையோடு விலங்குகள் மற்றும் பறவைகளை கையாள வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு;

* பறவைக் காய்ச்சல் பரவலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் மனிதர்களுக்கு இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை.

* இருமல், சளி, காய்ச்சல், சுவாசப்பிரச்னை போன்றவை பறவைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள். இருமல், சளி பாதிப்பு கொண்டவர்கள் சுய மருந்துகள் உட்கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவரை அணுகுவது அவசியம்.

* இறைச்சிக் கடையில் பணியாற்றுபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை பொதுவெளியில் கொட்டக்கூடா.து

* பறவைகள் இறந்து கிடந்தால், உடனடியாக கால்நடைத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

* கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* முழுமையாக சமைக்கப்படாத, சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

* பறவை காய்ச்சல் சம்பந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.

* பறவை காய்ச்சல் குறித்த கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 104-ஐ தொடர்புகொள்ளவும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Health Department ,Chennai ,Public Health Department ,Vedandangal Wetland Bird Cage ,Kindi Children's Park ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...