×

கல்பாக்கம் அனுமின் நிலையம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு

திருக்கழுக்குன்றம், மார்ச் 21: கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருளால் பெரும் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே சதுரங்கப்பட்டினம், மீனவர் பகுதி கடற்கரை ஓரத்தில் மர்ம பொருள் ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை, அப்பகுதியை சேர்ந்த மீனவர் ஞானசேகர் என்பவர், பார்த்து கடலோர காவல் படைக்கும், மீனவ கிராமத்தாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர், அந்த மர்ம பொருளை ஆய்வு செய்து, அதனை பறிமுதல் செய்தனர். அது சுமார் 8 கிலோ எடையுள்ள பைபர் மற்றும் கண்ணாடி கலந்த மர்ம பொருளாக இருந்தது. இது கப்பலுக்கு பயன்படுத்தும் திசை காட்டும் ரேடார் கருவியாக இருக்கலாமோ என்று சந்தேகம் கடலோர காவல் படையினருக்கு எழுந்தது. அப்படியிருந்தாலும் இப்பொருள் எப்படி இங்கு வந்தது என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kalpakkam Nuclear Power Plant ,Thirukkazhukundram ,Chathurangapattinam ,Fisherman ,Chengalpattu district ,
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...