×

மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை: பிரதமர் நெதன்யாகு

ஜெருசலேம்: பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க இஸ்ரேல் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு பொறுப்புணர்வுடன் படிப்படியாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகள் சிரமம் ஏதுமின்றி உரிய பாதுகாப்புடன் வழக்கம்போல் பள்ளிகளுக்குச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் மீதான சுமையை எளிதாக்கவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள நெதன்யாகு. நாட்டின் பாதுகாப்பு, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ராணுவத்தின் அறிவுறுத்தல்களை இஸ்ரேல் மக்கள் பின்பற்றுவதாக நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

Tags : West Asia ,Israel ,Netanyahu ,JERUSALEM ,ISRAELI ,BENJAMIN NETANYAGU ,
× RELATED உலகின் சக்திவாய்ந்த போர் விமானம்...