- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சீமான்
- தமிழ் கட்சி
- சென்னை
- சீமன்
- நாம் தமிழர் கட்சி
- தமிழ்நாடு சட்டமன்றம்
- லைநகர்
- தமிழ் நகர்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான். 49 தலைப்பில், 462 பக்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். லைநகரை மாற்றுவோம் தமிழகத்தை மாற்றுவோம்; அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம்; தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்; நீர்வளப் பெருக்கம்; தூய குடிநீர் இலவசம்; வேளாண்மை; மருத்துவம்; உடலினை உறுதி செய்; போதை ஒழிப்பு; பெண்ணுரிமை; மாற்றுத்திறனாளிகள் நலன்; அன்புத்தளிர்; அன்புச்சோலை; உழவர் நலன்; மீனவர் நலன்; வணிகர் நலன்; தூய்மை பொறியாளர்; அமைப்பு சாராத் தொழிலாளர் நலன்;
காவலர்க்களுக்கான சேவை; பசுத்தமிழ்நாடு; காலநிலை மாற்றுவோம்; வனம் செய்வோம்; விலங்குகள் பறவைகள் நலன்; கனிம வளப்பாதுகாப்பு; கழிவு மேலாண்மைல் கையூட்டு ஊழல் ஒழிப்பு; வெளிப்படையான நிர்வாகம்; ஈழம் எங்கள் இனத்தின் தேசம்; ஈழத்தமிழ் உறவுகளுக்கானத் தீர்வு; தமிழ் மீட்சி; தமிழர் மெய்யியல்; தொல் தமிழர் மீட்சி; அயலகத் தமிழருக்கான அமைச்சகம்; கல்விக்கொள்கை; போக்குவரத்து கொள்கை; பொருளாதாரம்; சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி; தொழில்;
தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் நலன்; தமிழ்த்தேசிய வைப்பகம்; மாற்று மின் பெருக்கம்; சுற்றுலா கொள்கை; செய்தி ஒளிபரப்புத் துறை; திரைக்கலை மேம்பாடு; கலை, இலக்கிய, பண்பாட்டு மீட்சி; நீதித்துறைச் சீர்திருத்தம்; காலத்தின் தேவை; தாய்நில உரிமை; நாம் தமிழர் கட்சி எதிர்க்கும் சட்டங்களும், திட்டங்களும் என்று 49 தலைப்பில், 462 பக்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும். தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே துறையை மாநில அரசுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும், படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும், சாதிரீதியிலான இடஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்க்குடிகளுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வாங்கப்படும், மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
ஆற்றுநீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்குத் தடை விதிக்கப்படும். குடிநீர் விற்பனை தடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கப்படும், ஆங்கில மருத்துவம் தமிழ் வழியில் நடத்தப்படும், பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையை…” பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக்கப்படும். தலைமைச் செயலகம், சட்டமன்றம் திருச்சிக்கு மாற்றப்படும், பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் தனி தொகுதிகள் பெறப்படும்.
