×

ஜெயலலிதா இருக்கும்போது போயஸ் கார்டனில் பிச்சை எடுத்தது பாஜ; டெல்லிக்கு போய் இன்று எடப்பாடி பிச்சை எடுக்கிறார்

புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி கோவையில் அளித்த பேட்டி: ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என்பதற்காக, முதலமைச்சரை நேரில் சந்தித்து, எங்களது ஆதரவை தெரிவித்தோம். பாஜவின் இலக்கு அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான். அதனை எடப்பாடியை கொண்டு செயல்படுத்தி விட்டார்கள். ஜெயலலிதா இருந்தபோது, பாஜவினர் போயஸ் கார்டன் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். தற்போது எடப்பாடி டெல்லி சென்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அக்கூட்டணியில் முதலமைச்சர் யார் என்பதை பாஜ தான் முடிவு செய்யும். அதிமுக எடப்பாடி உடையது இல்லை.

அவர் என்னை தேடி வந்து எவ்வளவு தான் அழைத்தாலும், நான் அங்கு செல்ல மாட்டேன். எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு துரோகியை அரசியலில் யாரும் பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்.சசிகலா ஆரம்பித்துள்ள கட்சி, அவருடைய சொந்த கட்சி அல்ல. அவர் யாரிடமோ இருந்து கட்சியை வாடகைக்கு வாங்கி இருக்கலாம். டிடிவி தினகரன் மீது உள்ள கோபத்தினால் அவர் அவ்வாறு செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது. டிடிவி தினகரனுக்கு 300 வாக்குகள் கூட வராது. எம்ஜிஆர், ஜெயலலிதா போல முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் 10 வருடம் முதலமைச்சராக தொடர்வார். அதிமுகவிற்கு ஒரு சீட்டு கூட வராது, அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியாக தான் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் எந்தெந்த நடிகைகளை கேட்பாங்களோ?
‘‘சி.வி.சண்முகம் நயன்தாரா பற்றி பேசியது கேவலமான அரசியல். இது போன்ற ஆட்களை வைத்துக் கொண்டுதான் எடப்பாடி அரசியல் செய்கிறார். இனி அங்கே இருப்பவர்களும் ஒவ்வொரு நடிகைகளாக கேட்பார்கள் போல? என்று புகழேந்தி தெரிவித்தார்.

Tags : BJP ,Poes Garden ,Jayalalithaa ,Edappadi ,Delhi ,Pugazhendi ,Anna Dravida Munnetra Kazhagam ,Coimbatore ,Chief Minister ,RSS ,Sangh Parivar ,Tamil Nadu ,AIADMK ,
× RELATED பெண்கள் குறித்து இழிவான பேச்சு; அதிமுக...