×

தொழில் நிறுவனங்கள், வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் தேர்தலை சிறப்பாக நடத்திடும் வகையில் நடத்தை விதிமுறைகளை பின்பற்றவேண்டும்

காஞ்சிபுரம், மார்ச் 18: சட்டமன்ற தேர்தலை சிறப்பாக நடத்திடும் வகையில் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள், வங்கி, அச்சகம், திருமண மண்டபம், உணவகம், தங்கும் விடுதி, நகை கடை, கேபிள் தொலைக்காட்சி, திரையரங்க உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் காஞ்சி கலெக்டர் சினேகா அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, தேர்தலை சிறப்பாக நடத்திடும் வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக கேபிள் டிவி இயக்குநர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், திருமண மண்டபம், தங்கும் விடுதி உணவகம் மற்றும் கூட்டரங்க உரிமையாளர்கள், நகை அடகுத் தொழில் புரிவோர், அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள், மாவட்ட அச்சக உரிமையாளர்கள், பிளக்ஸ், டிஜிட்டல் உரிமையாளர்கள், தேசிய, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி மேலாளர்கள், வணிகவரி அலுவலர்கள், தொடர்பு அலுவலர் (Nodal Officer) ஆகியோர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சினேகா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் விவரங்கள் வருமாறு:
 ஊடகங்களில் அரசு அனுமதியின்றி கட்சி சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் வேட்பாளர்கள் விவரங்கள் எதும் ஒளிப்பரப்பக்கூடாது.
 கட்சி சம்பந்தமான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்ற நிகழ்வுகளை அனுமதியின்றி ஒளிப்பரப்பக்கூடாது.
 (விசிவிசி) எம்சி எம்சிகுழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின்னணு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மட்டும் ஒளிப்பரப்ப வேண்டும்.
 திருமணம் மற்றும் சுபநிகழ்சிகள் தவிர அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால், அதன் விவரத்தினை முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
 தங்கும் விடுதிகளில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்ற பின்னரே, தங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
 தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளன்று வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலத்திலிருந்து தேர்தல் தொடர்பாக வந்து தங்கியிருப்பவர்களை வெளியேறச் செய்ய வேண்டும்.
 அடகு கடைகளில் அடகு வைக்கப்படும் நகைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மீள திருப்பப்படும்போது. அவை குறித்த விவரங்களை உடனடியாக அருகாமையில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கைளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது.
 அரிசி ஆலைகளில் அரிசி மூட்டைகள் மற்றும் பிறபொருட்கள் வழங்குவது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அறியப்பட்டால் உடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அச்சக உரிமையாளர்கள், தங்களது அச்சகத்தில் அச்சடிக்கப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம் ஆகியவற்றில் அச்சடிப்பவர்கள் விவரம் குறிப்பிடப்பட வேண்டும்.
 தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அச்சு ஊடகத்தில் முக்கியமாக செய்தி தாள்களில் வெளியிடப்படுகின்ற விளம்பரங்கள் அச்சிடுவதை தவிர்க்கப்பட வேண்டும்.
 தேர்தல் செயல்பாட்டின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் எடுத்தல் அல்லது வங்கி கணக்கில் அளவுக்கு அதிகமாக டெபாசிட் அல்லது திரும்ப பெறுதல் போன்ற எந்த நிகழ்வும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
 வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட வங்கி அலுவலர்கள், உரிய ஆவணங்களை எடுத்துச்செல்வதை சம்பந்தப்பட்ட வங்கி உறுதி செய்ய வேண்டும்.

Tags : Kanchipuram ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கலெக்டர் ஆய்வு