கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது நின்றபாடில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு என்று கூறி அன்னூர் காலனி பகுதிகளில் வீடுவீடாக சுவர் கடிகாரம் வழங்கும் பணி நேற்று நடந்தது. கோவை மாவட்டம், அன்னூர் தெற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள காலனி பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று இரவு வரை சுவர் கடிகாரம் வீடு வீடாக வழங்கப்பட்டது.
அதிமுக சார்பில் ஏற்கனவே கடந்த வாரம் ஹார்ட் பாக்ஸ் மற்றும் எவர்சில்வர் பிளேட் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டது. இந்த துணிப்பையில் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகர் தனபாலின் படம் அச்சடிக்கப்பட்ட டோக்கன் அதிமுகவினருக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அவர்களுக்கு பொருட்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது முறையாக தற்போது சுவர் கடிகாரமும் அதிமுகவினர் தேர்தல் விதிமீறி வீடுவீடாக வழங்கி வருகின்றனர்.
