×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம், மார்ச் 13: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடைபெற உள்ளது என்று கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் மேல்ஒட்டிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் வெங்கச்சேரி, வாலாஜாபாத் வட்டத்தில் கம்மராஜபுரம், பெரும்புதூர் வட்டத்தில் எளுமியான்கோட்டூர், குன்றத்தூர் வட்டத்தில் அமரம்பேடு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள், தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி, மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும் மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Collector ,Sneha ,
× RELATED உலமாக்களுக்கு மானிய விலை பைக்