×

விமான எரிபொருள் விலை உயர்வு எதிரொலி : விமான கட்டணங்களை உயர்த்தியது ஏர் இந்தியா

டெல்லி : சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்ந்து வந்ததை தொடர்ந்து, ஏர் இந்தியா தனது விமான கட்டணங்களை உயர்த்தியுள்ளது. விமான எரிபொருள் விலையேற்றம், விநியோக தடைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 3 கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 12 முதல் அமலுக்கு வரும் முதற்கட்டத்தில் உள்நாட்டு பயணங்கள் மற்றும் சார்க் நாடுகளுக்கானபயணங்களுக்கு ரூ.399 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேற்கு ஆசிய நாடுகளுக்கான பயணங்களுக்கு ரூ. 919 உயர்த்தப்படும். தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ரூ.5,516 ஆகவும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ரூ. 8,274 ஆகவும் கட்டணம் உயரும். வட அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கான விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.16,800 வரை உயர்த்துகிறது. மார்ச் 18 முதல் அமலுக்கு வரும் 2ம் நடையில் ஐரோப்பியா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட தூரக் கிழக்கு நாடுகளுக்கான உயர்வு மூன்றாவது நிலையில் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Air India ,Delhi ,
× RELATED மேற்கு ஆசியப் போர்: சிலிண்டர்...