×

கரூர் அருகே வலிப்பு நோயால் மெஸ் பெண் உதவியாளர் பலி

 

கரூர், மார்ச் 11: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் மெஸ் உதவியாளராக பணியாற்றி வந்த பெண், வலிப்பு நோயால் இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையார் பகுதியை சேர்ந்தவர் கருர் மாவட்டம் மண்மங்கலம் அடுத்துள்ள மீனா(53). இவர், கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மெஸ்ஸில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.கடந்த 8ம்தேதி அன்று சம்பவ இடத்தில் இருந்த போது, திடிரென வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருததுவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின் பேரில், வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Karur ,Manmangalam ,Karur district ,Nanjai Idayar ,Namakkal district ,
× RELATED இலங்கை தமிழர் முகாமில் சிதிலமடைந்துள்ள சுற்றுச்சுவர்கள்