புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனது நீண்டநாள் தோழியான வான்ஷிகாவை வரும் 14ம் தேதி திருமணம் செய்கிறார். மலைவாசஸ்தலமான உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் நடக்கிறது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த குல்தீப் அந்த வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
