×

தொழில்நுட்பம், உற்பத்தி விரிவாக்கத்திற்காக ஹூண்டாய் நிறுவனம் ரூ.45,000 கோடி முதலீடு : வளர்ச்சியின் மையமாக மாறும் சென்னை!!

சென்னை : தயாரிப்பு மேம்பாடு, புதிய தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி விரிவாக்கத்திற்காக ரூ.45,000 கோடி முதலீட்டை ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்துள்ளதன் மூலம் வளர்ச்சியின் மைய புள்ளியாக சென்னை மாறியுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் ஹூண்டாய் ஆலையில், டேப்லெட்-ஐ பயன்படுத்தி, புதிய கார் சோதனையை செய்கின்றனர். HIDIS 2.0′ இந்த டிஜிட்டல் முறை மூலம், வாகனத்தின் குறைபாடுகள், அடையாள எண்களை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், காரின் தரம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப உறுதி செய்யப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்கள், 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இந்த டிஜிட்டல் மாற்றமே ஹூண்டாயின் அடுத்தகட்ட பிரமாண்ட முதலீட்டிற்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தயாரிக்கப்படும் கார்களின் தயாரிப்பு மேம்பாடு, புதிய தொழில்நுட்பம், உற்பத்தி விரிவாக்கத்திற்காக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ.45,000 கோடி முதலீட்டை உறுதி செய்துள்ளது. இதில் 60% மேம்பாடு மற்றும் புதிய தயாரிப்பு உருவாக்கத்திற்கும் எஞ்சிய 40% மூலதனம் உள்ளூர் மயமாக்கல் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்படும்.

மேலும், இந்த ஆலையில், 200 நேரலை டேஷ்போர்டுகள், ரோபோடிக் கருவிகள் மூலம் உற்பத்தி கண்காணிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு Virtual Reality மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில், புதிய ஆலை தொடங்கப்பட்டிருந்தாலும், ஹூண்டாய் வாகன தயாரிப்பின் இதயமாக சென்னையே தொடர்கிறது. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள வலுவான விநியோகஸ்தர் வலையமைப்பு, பல்லாண்டு கால அனுபவம் சென்னையை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றியுள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளது.

Tags : Hyundai Company ,Chennai ,Hyundai ,
× RELATED மாநிலங்களவைத் தேர்தலில்...