டெல்லி: மேற்காசியா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று (மார்ச்.4) 30 இண்டிகோ, 23 ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என மொத்தம் 58 விமானங்கள் இன்று இயக்கப்படுகிறது. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை; கள நிலவரத்திற்கு ஏற்ப இந்தியா – வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன என ஒன்றிய விமான துறை தகவல் தெரிவித்துள்ளது.
