பழநி, மார்ச் 4: பழநி அருகே அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் சங்கரம்மாள் (72). லேசான மனநிலை பாதிப்பு உடையவர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சங்கரம்மாள் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதன்பேரில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரம்மாளின் உடலை மீட்டனர். தகவலறிந்து வந்த பழநி தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
