- முலம்
- இலங்கை
- சென்னை
- சென்னை சர்வதேச விமான நிலையம்
- வெளிநாட்டினர் பதிவு மண்டல
- சென்னை பெருநகர போலீஸ்
- மத்திய பிரிவு,
- பாஸ், கனுவாதி மற்றும் கள்ளி பாஸ்போர்ட் விசாரணை அலகு
- லாபி லோனா
சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் அவர்கள், நேற்று (02.03.2026) சென்னை பெருநகர காவல், மத்தியகுற்றப்பிரிவு, சீட்டு, கந்துவட்டி மற்றும் போலிகடவுச்சீட்டு புலனாய்வு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், இலங்கை நாட்டைச் சேர்ந்த பேபி லோனா பெ/வ 48 க/பெ முஸ்தாக் அகமது என்பவர் போலி ஆவணங்கள் மூலம் தனது இலங்கை நாட்டு குடியுரிமையை மறைத்து தனது பெயரில் இந்திய கடவுச்சீட்டு பெற்று இலங்கைக்கு செல்வதற்காக முயற்சி செய்ததாக தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஆ.அருண், உத்தரவின் பேரில் மத்தியகுற்றப்பிரிவு, சீட்டு, கந்துவட்டி மற்றும் போலிகடவுச்சீட்டு புலனாய்வு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தியகில், வழக்கின் எதிரியான இலங்கையை சேர்ந்த பேபி லோனா பெ/வ.48 க/பெ. முஸ்தாக் அகமது என்பவரின் பெற்றோர்கள் இலங்கை நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதும். இந்தியரான முஸ்காக் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரது குடும்பக்கோடு 2015ம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் வழியாக இந்தியாவிற்கு குடிவந்து தஞ்சாவூர் மாவட்டம். திருவிடைமருதூரில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார்கள்.
அப்போது இந்திய ஆவணங்களான ஆகார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். அகன் அடிப்படையில் இந்திய கடவுசீட்டு பெற்று, கற்போது இலங்கைக்கு செல்ல முயன்ற போது நேற்று (02.03.2026) கைது செய்து, பாஸ்போர்ட் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுக்கப்பட்டு, நீதிமன்ற உக்கரவுபடி, சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொது மக்கள் இது தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் துணை தூகரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுக்கப்படுகிறது.
