×

உத்திரமேரூர் அருகே பைக்கில் அதிவேகமாக வந்தபோது வேகத்தடையில் தவறி விழுந்து அரசு பஸ் கண்டக்டர் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பைக்கில் அதிவேகமாக வந்தபோது வேகத்தடையில் தவறி விழுந்து அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார். சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (30). இவர், மாநகர போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஹேமமாலினி. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். ஸ்டீபனின் பாட்டி வீடு உத்திரமேரூர் அருகே வைப்பணை கிராமத்தில் உள்ளது. அதனால் பாட்டியை பார்த்து விட்டு வர வேண்டும் என நேற்று மாலை வீட்டில் இருந்து வைப்பணைக்கு பைக்கில் புறப்பட்டார்.

உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி பகுதியில் வந்தபோது வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்துள்ளார். அதனால் வேகத்தடையில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தகவலறிந்து உத்திரமேரூர் போலீசாரும் விரைந்தனர். அதற்குள் ஸ்டீபன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Uttaramore ,Uthramarur ,Uttaramur ,Stephen ,Madambakkam ,Chennai ,Municipal Transport Corporation ,Hemamaleen ,
× RELATED கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக...