×

“10 வருடங்களுக்கு பிறகு பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்துள்ளது” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

 

சென்னை: 10 வருடங்களுக்கு பிறகு பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்துள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. திமுகவுடன் கூட்டணி அமைந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா, சுதீஷ் மரியாதை செலுத்தினர். கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிகவினருடன் உறுதிமொழி ஏற்றதுடன், மக்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது; தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். கேப்டனும் கலைஞரும் பல ஆண்டு நட்பு கொண்டவர்கள். எங்களுக்கு திருமணம் செய்துவைத்தவர் கலைஞர்தான். 10 ஆண்டுகளுக்குப் பிறகு பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்திருக்கிறது. கலைஞர் – விஜயகாந்த் உறவு ஆழமானது; இரு தலைவர்களின் ஆசியோடு கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திமுக – தேமுதிக கூட்டணியை இரு கட்சி நிர்வாகிகளும் வரவேற்றுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். எத்தனை தொகுதி என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறினார்.

Tags : Premalatha Vijayakanth ,Chennai ,Demutika ,Dimuka alliance ,Thimuga ,Premalatha ,Sutish ,Vijayakanth Monument ,Coimpet, Chennai ,
× RELATED பொதுவாழ்க்கையில் முறைகேட்டில்...