- அண்ணா நினைவு தின பேரணி
- பரமத்திவேலூர்
- அண்ணா நினைவு தினம்
- நாமக்கல் மேற்கு மாவட்டம் திமுக
- மேற்கு மாவட்டம்
- கே.எஸ். மூர்த்தி…
பரமத்திவேலூர், பிப்.4: பரமத்திவேலூரில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. அண்ணா நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதிப் பேரணி நடந்தது. பேரணியில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கேஎஸ்.மூர்த்தி தலைமையில் நிர்வாகிகள், வேலூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து திருவள்ளுவர் சாலை, அரசு மருத்துவமனை சாலை வழியாக சென்று அண்ணா சிலையை அடைந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த அமைதி ஊர்வலத்தில் ஒன்றிய செயலாளர்கள் தனராசு, மோகனூர் சண்முகம், கபிலர்மலை தெற்கு சாமிநாதன், கபிலர்மலை மத்திய ஒன்றிய செயலாளர் சரவணகுமார், லலித்குமார் மற்றும் நகர செயலாளர் முருகன், கருணாநிதி, முருகவேல், ரமேஷ் பாபு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, மாவட்ட பொறுப்பாளர்கள், திமுக சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் அதிமுக சார்பில் சேகர் எம்எல்ஏ மற்றும் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
