சென்னை : அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஓய்வூதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக ரூ.11,000 வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்கள் பெறும் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
