தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளியான சங்கரலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மகன் கொல்லப்பட்ட துக்கத்தில் அவரது தாய் அழகுநாச்சி விஷம் அருந்திய நிலையில், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
