சென்னை: மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெருநகர சென்னை மாநகராட்சியின், ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில், பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 586 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிடும் அடையாளமாக 44 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.