சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் 2.44 கோடி மின்இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டது. 90.69 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 2.38 கோடி வீடுகளுக்கான மின்இணைப்பில், 2.17 கோடி வீடுகளின் மின்இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டது. 23.28 லட்சம் விவசாயிகளில் 18.28 லட்சம் விவசாயிகள், மின்இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.