கல்வராயன்மலை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க எஸ்பி மோகன்ராஜ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி, கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்கள் ராமலிங்கம் மற்றும் காவலர்கள் ரமேஷ், மாரியப்பன், தனசேகர், ஜெயவேல் ஆகியோர் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.