திண்டுக்கல்: ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய திண்டுக்கல்லை சேர்ந்த துணை நடிகை திவ்யபாரதி, கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஜிஹெச்சில் சிகிச்சையில் இருந்த அவர் 4 மணி நேரத்தில் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் யூடியூப் சேனல் நடத்தி அதில் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பை சேர்ந்த சினிமா துணை நடிகை திவ்யபாரதியை (24) நடிக்க வைத்து, தனது கவிதை தொகுப்புகளை வெளியிட்டார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. திவ்யபாரதி திருமணத்தை தள்ளி போட்டதோடு, பல்வேறு காரணங்களை கூறி ரூ.30 லட்சத்துக்கு பணம், தங்க நகைகள் மற்றும் பர்னிச்சர்களை, அவரிடம் இருந்து வாங்கியதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் சந்தேகமடைந்து அவரை பற்றி பகலவன் ராஜா விசாரித்தபோது, ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளது தெரிய வந்தது.