சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பால் கொட்டிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டியது. மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் பெய்த அதி கனமழையால் மலைக்கிராமங்கள் வெள்ள காடாகின. ஆங்காங்கே அருவிகள் போல வெள்ளம் கொட்டியதால் பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக காஞ்வா பகுதியில் சாலைகள், பாலங்கள் மூடப்பட்டன.