எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல்.!

டெல்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். ஈபிஎஸ் தரப்பு வரவும் 11ம் தேதி பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஓபிஎஸ் மனு அளித்தார். ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது என தெரிவித்தார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது என்று எனவே, 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: