கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கேசவலு நகர் பகுதியில் வசித்து வரும் சாதிக் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக செல்லப்பிராணியான பூனை குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். தற்போது அவர் வீட்டில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அவர்கள் வீட்டுக்குள்ளே உள்ள கிணற்றில் அந்தப் பூனை குட்டி தவறி கீழே விழுந்துள்ளது. பூனை குட்டியை வெகுநேரமாக காணவில்லை என்பதை அறிந்த சாதிக் சத்தம் கேட்டு கிணற்றுக்கு அருகில் சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் பூனைக்குட்டி நீந்திக் கொண்டிருப்பதை பார்த்த அதிர்ந்தார். உடனடியாக அவர் அந்தப் பூனை குட்டி எடுப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்தபோதிலும் கடைசிவரை பலன் இல்லாத காரணத்தால் தீயணைப்பு துறை அதிகாரிகளை வரவழைத்தார்.