×

தேர்தல் காரணமாக அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக, அன்றைய நாளில் நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டது. இதையடுத்து, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிப்ரவரி 19ம் தேதி இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிட கலை மாணவர்களுக்கு ஐந்து பருவத் தேர்வுகள் நடைபெற இருந்தது. இந்நிலையில் அந்த ஐந்து பருவத் தேர்வுகளும் வரும் மார்ச் மாதம் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழம் அறிவித்துள்ளது.


Tags : Anna University , Election, Anna University Exam, Postponement
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!