தமிழக பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது; பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்.!

சென்னை: பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 to 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். ஆனால், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் 1-12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். பள்ளிகளில் 100% மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Related Stories: