திருத்தணி: திருத்தணி அருகே பாகசாலை கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலம் மூழ்கிவிட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் கேசவபுரம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர், பாகசாலை, எல்வி.புரம் வழியாக கொசஸ்தலை ஆற்றிலும் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம், பிஞ்சிவாக்கம் வழியாக செல்லும் கூவம் ஆற்றிலும் கலந்தது. இந்த நிலையில், கடந்த ஒருவாரமாக பாகசாலை வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குப்பம்கண்டிகையில் உள்ள தரைப்பாலம், எல்வி.புரம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் ஆகியவை முற்றிலும் அடித்துசெல்லப்பட்டுவிட்டது.இதன்காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி மணவூர், திருவாலங்காடு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு பாகசாலையில் உள்ள தரைப்பாலத்தை கடந்துதான் சென்றுவந்தனர்.