விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடந்த உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தை துவக்கினோம். அதை மூடிவிட்டு, அண்ணாமலை பல்கலையோடு இணைத்துவிட்டார்கள். நாங்கள் ஆட்சியிலிருக்கும்போது, திமுக ஆட்சியில் துவங்கிய திட்டங்களாக இருந்தாலும் நாங்கள் அமல்படுத்தினோம்.