காஞ்சிபுரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி ஏனாத்தூர் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் இருந்து ஏனாத்தூர் வரை வாக்களிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் சென்றனர்.