தா.பேட்டை: தா.பேட்டையில் ஒருவரது வீட்டில் வளர்ந்துள்ள,இமயமலை சாரலில் வளரும் தன்மையுள்ள செடியில் இருந்து பிரம்ம கமலம் எனும் மலர் நேற்று மலர்ந்தது. இதனை வியப்புடன் பார்த்த மக்கள் தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம் தா.பேட்டை வடுகர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இயற்கை ஆர்வலரான இவரது வீட்டில் இமயமலைச் சாரலில் வளரும் தன்மையுள்ள செடி ஒன்றையும் வளர்த்து வருகிறார். இச்செடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு பிரம்ம கமலம் எனும் அழகான பூ மலர்ந்து.