தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

சென்னை: சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,756 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,394 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 24,98,289 பேர் குணமடைந்துள்ளனர்.  இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,521 ஆக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 33,995 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: