புதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உருளையான்பேட்டை சுயேச்சை எம்.எல்.ஏ நேருவின் வெற்றிக்கு எதிராக திமுகவின் ஜி.கோபால் வழக்கு தொடர்ந்துள்ளார். 2018ல் வெளியான அவதூறு செய்தியை தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தியதாக நேரு மீது கோபால் புகார் அளித்திருந்தார். சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: