திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நந்தகுமார்(19) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நந்தகுமார், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்படி தனது நண்பர்களான வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்த 17வயது சிறுவன், விக்னேஷ்(18) ஆகியோருடன் மரக்காணம் சென்ற நந்தகுமார், அங்கிருந்த சிறுமியை கடத்தியுள்ளார். இதற்கிடையே வீட்டில் இருந்த மகள் காணாமல் ேபானதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.