திருமணம் செய்வதாக சிறுமியை கடத்திய 3 வாலிபர்கள்

திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நந்தகுமார்(19) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நந்தகுமார், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதன்படி தனது நண்பர்களான வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்த 17வயது சிறுவன், விக்னேஷ்(18) ஆகியோருடன் மரக்காணம் சென்ற நந்தகுமார், அங்கிருந்த சிறுமியை கடத்தியுள்ளார். இதற்கிடையே வீட்டில் இருந்த மகள் காணாமல் ேபானதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடினர். அப்போது சிறுமி, 3 வாலிபர்களுடன் திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் சென்றது தெரிய வந்தது. உடனே சிறுமியின் பெற்றோர், திருவண்ணாமலையில் உள்ள உறவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உறவினர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு சென்று, பஸ்சில் இருந்து இறங்கிய சிறுமி மற்றும் நந்தகுமார், அவரது நண்பர்கள் 2பேரை மடக்கி பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: