தாம்பரம்: தாம்பரம் அருகே அடுத்தடுத்து 5 கடைகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்திப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உரிமையாளர்கள் வந்து பார்த்தனர். அப்போது தண்டபாணி (39) என்பவருக்கு சொந்தமான மருந்து கடையில் ரூ8 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இவரது கடையை ஒட்டிய சண்முகசுந்தரம் (60) என்பவரின் பால் கடை, கணேஷ் (35) என்பவரின் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.