கந்துவட்டி: 20 பேர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சென்னை: கந்துவட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 20 பேர் தீக்குளிக்க முயற்சி நடந்துள்ளது. மதுரவாயலை சேர்ந்த சண்முகம் என்பவரிடம் வாங்கிய கடனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 20க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் போலீஸ் சமரச முயற்சி செய்து வருகின்றனர்.

Related Stories: