சென்னை மாங்காட்டில் 35க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கைது

சென்னை: சென்னை மாங்காட்டில் 35க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் சூர்யா(23) கைது செய்யப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் சூர்யாவின் கூட்டாளி பட்டாபிராம் சங்கர் (38) என்பவரையும் கைது செய்தது மாங்காடு போலீஸ். கைதானவர்களிடம் இருந்து 35 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி, 2 மடிக்கணினி, 2 கேமரா மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் இருவரும் சேர்ந்து 14 இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: