மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கருப்பசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பாரம்பரிய நாட்டு ஆட்டினங்கள் அதிகளவில் உள்ளன. இவை மக்களுக்கு தீங்கற்ற சத்தான உணவையும், வருவாயையும் தருவதோடு, வேளாண்மை மற்றும் பயிர்களுக்கு உயிர் உரங்களையும் தருகின்றன. வாடிகுறி, யாடிகுறி, ஜன்னிகுறி, மொள்ளகுறி, ஜன்னாகுறி, ஜாலிகுறி என பல வகையான ஆட்டினங்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவை. இவை தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன. குறிப்பாக வரும் 10 ஆண்டுகளில் பாரம்பரிய நாட்டு ஆட்டினங்கள் அழிந்து போகும் சூழல் உள்ளது. தற்போது வணிக நோக்கத்தில் வளர்க்கப்படுவதால், உடனடியாக நோய்வாய்ப்படவும், பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.